கண்டி போகம்பறை பழைய சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த கைதிகளில் நால்வர் தப்பிக்க முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் 313 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து நான்கு கைதிகள் தப்பிச் செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது அதிகாரிகள் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்தே தப்பித்தவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை