Tuesday 23rd of April 2024 09:28:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முயற்சி: சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது!

சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முயற்சி: சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது!


இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடல்வழியாக சட்டவிரோதமாக தப்பித்துச் செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சட்டவிரோதமாக படகில் இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த 5 பேரும், அவர்களை அழைத்துச் சென்ற ஆட்கடத்தல்காரர்கள் இருவரும் மன்னார் – பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இதன்போது, 29 வயது இளைஞர் ஒருவரும், 29 வயது யுவதி ஒருவரும், 38 வயதான பெண்ணொருவரும், 08 மற்றும் 09 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

32 மற்றும் 37 வயதான பேசாலை பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்களே ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பேசாலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை, வட மாகாணம், தமிழ்நாடு, மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE