காரைநாகர் தொற்றாளருடன் தொடர்புபட்டு காரைநகர் இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைநகர் இந்து கல்லூரி முடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் இந்துக் கல்லூரியை 3 நாள்கள் மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
“வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய நாளை திங்கட்கிழமை தொடக்கம் வரும் புதன்கிழமை வரை 3 நாள்களுக்கு காரைநகர் இந்துக் கல்லூரி மூடப்படுகிறது.
காரைநகரில் கோரோனா தொற்று உள்ள ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமாகப் பழகிய ஆசிரியர் ஒருவர், காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்பிக்கின்றார். அவர் கடந்த வாரம் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவரது பிசிஆர் பரிசோதனை வரும் புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. அன்று அவருக்கு கோரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தால் மறுநாள் வியாழக்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்படும்” என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்