Thursday 25th of April 2024 11:57:02 AM GMT

LANGUAGE - TAMIL
.
மஹர சிறைக்குள் பதற்றம்: துப்பாக்கி பிரயோகத்தில் கைதி ஒருவர் பலி! (2ம் இணைப்பு)

மஹர சிறைக்குள் பதற்றம்: துப்பாக்கி பிரயோகத்தில் கைதி ஒருவர் பலி! (2ம் இணைப்பு)


மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக காவற்துறை விசேட அதிரடிப்படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

முன்னைய செய்தி...

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து அதிரடிப்படையினர் பிரவேசித்துள்ளனர்.

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE