இலங்கையில் இன்றும் ஏழு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த பெண் (வயது 50), கொதட்டுவ பகுதியைச் சேர்ந்த ஆண் (வயது 48), மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த ஆண் (வயது 73), சிலாபம் பகுதியைச் சேர்ந்த ஆண் (வயது 70), அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த பெண் (வயது 90), மருதானைப் பகுதியைச் சேர்ந்த ஆண் (வயது 78) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் 14 இலட்சத்து 63 ஆயிரத்து 497 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை