மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த நால்வரின் சடலங்கள் ராகம வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறையில் சிலருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்து கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முற்பட்ட நிலையில் துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.