வவுனியா நகரசபைக்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தெகிலுப்பைக்குளம் பிரதான வீதியின் உள்ளக வீதியான செபர்த்தியார் கோவில் வீதி தார் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரமபமாகின.
வவுனியா கோவில்குளம் , கோவில்புதுக்குளம் பத்தாம் வட்டாரமான பகுதிக்கு, புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் , வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகனால் ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியிலிருந்து குறித்த வீதி கிரவல் இடப்பட்டு தாரிட்டு செப்பனிடும் பணியின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கபட்டன .
தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் படி தனது வட்டார கிராமமான கோவில் குளம் , கோவில்புதுக்குளம் பகுதியில் 95 வீதமான நகரசபை வீதிகள் செப்பனிடும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து வீதிகளும் செப்பனிடப்படும் என நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் தெரிவித்தார்.