Tuesday 23rd of April 2024 09:26:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா கோவில்குளம் செபஸ்த்தியார் கோவில் வீதி தார் வீதியாக  செப்பனிடும் பணிகள் ஆரம்பம்!

வவுனியா கோவில்குளம் செபஸ்த்தியார் கோவில் வீதி தார் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்!


வவுனியா நகரசபைக்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தெகிலுப்பைக்குளம் பிரதான வீதியின் உள்ளக வீதியான செபர்த்தியார் கோவில் வீதி தார் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரமபமாகின.

வவுனியா கோவில்குளம் , கோவில்புதுக்குளம் பத்தாம் வட்டாரமான பகுதிக்கு, புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் , வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகனால் ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியிலிருந்து குறித்த வீதி கிரவல் இடப்பட்டு தாரிட்டு செப்பனிடும் பணியின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கபட்டன .

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் படி தனது வட்டார கிராமமான கோவில் குளம் , கோவில்புதுக்குளம் பகுதியில் 95 வீதமான நகரசபை வீதிகள் செப்பனிடும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து வீதிகளும் செப்பனிடப்படும் என நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE