பருத்தித்துறை சாரையடி என்ற பகுதியில் வீட்டில் தனித்திருந்த 08 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தாய், தந்தையர் வெளியே சென்ற நிலையில் சிறுமி வீட்டில் தனித்திருந்திருக்கிறார்.
வீட்டார் திரும்பி வந்து பார்த்த பெற்றோர், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருந்தபோதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டுவயது சிறுமி தானாக தூக்கில் தொங்குவது சாத்தியமே இல்லை என்பதால் அவருடைய மரணம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், பருத்தித்துறை