ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கோவிட் -19 கட்டுப்பாட்டு விவகார இராஜாங்க அமைச்சராக டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பதவியேற்றுள்ளார்.
2020 பொதுத் தேர்தலை தொடர்ந்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மேலதிக பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மகர சிறையில் நேற்று இடம்பெற்ற வன்முறையின் பின்னயில் சிறை விவகாரங்களுக்கு மேலதிகமாக அவருக்கு இந்தப் புதிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை