Tuesday 23rd of April 2024 07:23:48 PM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ் பல்கலைக்கழக ஆய்வுகூட பரிசோதனை: ஒருவருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

யாழ் பல்கலைக்கழக ஆய்வுகூட பரிசோதனை: ஒருவருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


யாழ் பல்கலைக்கழக கொரோனா ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் பல பகுதிளில் இருந்தும் பெறப்பட்டிருந்த 72 பேரின் மாதிரிகள் யாழ் பல்கலைக்கழக கொரோனா ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெறப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஒருவருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர் எனவும் ஏனைய 71 பேருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE