Wednesday 24th of April 2024 07:16:05 PM GMT

LANGUAGE - TAMIL
-
நேற்று முன்தினம் காணாமல் போன இளைஞர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு!

நேற்று முன்தினம் காணாமல் போன இளைஞர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு!


யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்த இளைஞர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சற்று முன்னர் வல்லிபுரக் கோவில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் காணாமல் போயிருந்த கிருஷ்ணபிள்ளை பிரதீபன் (வயது 24) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

வல்லிபுரக் கோவில் வீதிப் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரை அவதானித்த நபர் ஒருவர் அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து அவரை பருத்தித்துறை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்திருப்பதாக தெரியவருகிறது.

மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் கும்பல் ஒன்றே குறித்த இளைஞரை கடத்தியதாக குடும்பத்தாரால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE