Tuesday 16th of April 2024 04:23:51 PM GMT

LANGUAGE - TAMIL
.
மகர சிறை: காயமடைந்தோர் 107 ஆக அதிகரிப்பு! - 10 பேரின் நிலை கவலைக்கிடம்!

மகர சிறை: காயமடைந்தோர் 107 ஆக அதிகரிப்பு! - 10 பேரின் நிலை கவலைக்கிடம்!


மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்தவர்களது எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ள நிலையில் அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாககவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 107 பேர் தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறு காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு காயமடைந்த 71 பேரில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுள் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE