Friday 19th of April 2024 04:04:59 AM GMT

LANGUAGE - TAMIL
.
மீள் அறிவித்தல் வரும்வரை கடல் நடவடிக்கைகளுக்கு தடை!

மீள் அறிவித்தல் வரும்வரை கடல் நடவடிக்கைகளுக்கு தடை!


இலங்கை கடற்பரப்பில் மீள் அறிவித்தல் வரும்வரை கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து நேற்று (30) திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 530 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தாக வளிமண்டலயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இது ஒரு சூறாவளியாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இருந்து குறித்த சூறாவளி மட்டக்களப்பு மற்றும் பருத்தித்துறைக்கு இடையிலாக நாட்டுக்குள் நகரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீள் அறிவிப்பு வரும் வரை நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மீன்பிடித்தல் உள்ளிட்ட கடற்படை நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் குறித்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, பருத்தித்துறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE