Saturday 20th of April 2024 12:33:07 AM GMT

LANGUAGE - TAMIL
.
CEB வவுனியா அலுவலகம்: உத்தியோகத்தருக்கு திடீர் சுகயீனம்! பி.சி.ஆர். முன்னெடுப்பு!

CEB வவுனியா அலுவலகம்: உத்தியோகத்தருக்கு திடீர் சுகயீனம்! பி.சி.ஆர். முன்னெடுப்பு!


இலங்கை மின்சார சபை வவுனியா அலுவலகத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவை சேர்ந்த அரச ஊழியர் ஒருவரே இவ்வாறு சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையின் வவுனியா அலுவலகத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தாராக கடமையாற்றிவரும் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைதீவு உடையார்கட்டு பகுதியை வதிவிடமாகக் கொண்ட குறித்த நபர் விடுமுறையில் அங்கு சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமை வவுனியாவில் உள்ள அவரது அரச விடுதிக்கு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் தொடர்ச்சியான வயிறுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் நோயாளர் காவுவண்டியின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளார்.

அவருக்கு கொவிட்-19 வைரஸ் பீடித்துள்ளதா என்பதை கண்டறிவதற்காக பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE