ஈரானின் அணு சக்தி தலைமை விஞ்ஞானியான மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது.
மனிதகுலத்திற்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத செயல்களையும் இலங்கை கண்டிக்கிறது என இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மிக வெற்றிகரமான வழிமுறை பேச்சுவர்த்தைகளே என இலங்கை உறுதியாக நம்புகிறது எனவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலையுடன் இஸ்ரேல் தொடர்புபட்டுள்ளதாக ஈரான் உறுதியாகத் தெரிவித்துள்ளது. தூரத்தில் இருந்து வெடிக்கவைக்கப்பட்ட வெடிமருந்துகள் மூலம் அவர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை பகிரங்கமாக எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.