Thursday 28th of March 2024 01:34:11 PM GMT

LANGUAGE - TAMIL
.
புரேவி சூறாவளி தாக்கம்: கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 41 பேர் பாதிப்பு!

புரேவி சூறாவளி தாக்கம்: கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 41 பேர் பாதிப்பு!


புரேவி சூறாவியின் தாக்கமாக கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தை அச்சுறுத்தி வரும் புரேவி சூறாவளியின் தாக்கம் வலுவாக உணரப்படுவதற்கு முன்னதாகவே பெய்து வரும் மழை மற்றும் காற்றினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று பிற்பகல் 3.30 மணிவரை பதிவான தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

9 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

சீரற்ற வானிலை காரணமாக 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அப்புள்ளிவிபரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE