Thursday 18th of April 2024 07:37:34 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை; 124 ஆக அதிகரித்தது கொரோனா மரணம்!

இலங்கை; 124 ஆக அதிகரித்தது கொரோனா மரணம்!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் இறுதியாக உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு தெரிவித்துள்ளது.

கொழும்பு 13 ஐச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 111 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE