கட்டமைக்கப்பட்ட சர்வதேச கிரிமினல் கும்பல்கள் கொரோனா தடுப்பூசிகளை இலக்குவைத்து குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என சர்வதேச பொலிஸ் ஒருங்கிணைப் அமைப்பான இன்டர்போல் எச்சரித்துள்ளது.
அத்துடன், இத்தகைய குழுக்களால் சந்தையில் போலி மருந்துகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் எனவும் இன்டர்போல் தெரிவித்துள்ளது.
பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்ட இன்டர்போல் தனது 194 உறுப்பு நாடுகளின் சட்ட அமுலாக்க பிரிவினருக்கு இது குறித்து எச்சரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உலகம் முழுவதும் சந்தைக்கு வரத் தயாராக உள்ள நிலையில் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கவும் கிரிமினல் கும்பல்கள் திட்டமிடலாம் எனவும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி வலைத்தளங்கள் கொரோனா தடுப்பு மருந்துகள் தேவைப்படுவோரை இந்தக் குப்பல்கள் இலக்குவைக்கலாம். போலி மருந்துகளைச் சந்தைக்கு விடுவதன் மூலம் உயிருக்கு கூட இந்தக் கும்பல்கள் ஆபத்தை எனவும் இன்டர்போல் பொதுச் செயலாளர் ஜூர்கன் ஸ்டாக் கூறினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)