மஹர சிறைச்சாலை அமைதியின்மைக்குக் காரணமானதாகக் கூறப்படும் 125 கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கைதிகளுக்கு எதிராக, எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மஹர சிறைச்சாலை அமைதியின்மைக்குக் கைதிகள் காரணம் அல்ல எனவும், அரசின் பொறுப்பற்ற செயலே காரணம் எனவும் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
800 பேர் இருக்க வேண்டிய சிறையில் 3 ஆயிரம் கைதிகளை அரசு அடைத்து வைத்திருந்தமை எந்த வகையில் நியாயம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசின் இந்தப் பொறுப்பற்ற செயல் காரணமாகவே மஹர சிறையில் கொரோனாத் தொற்று பரவியது எனவும், அதனால் கொதிப்படைந்த கைதிகள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜனநாயக வழியில் நீதி கோரி ஆர்ப்பாட்டம் செய்தபோது அரசு துப்பாக்கிகளால் வன்முறை வழியில் பதிலளித்துள்ளது எனவும் கைதிகளின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.