Wednesday 24th of April 2024 07:42:52 PM GMT

LANGUAGE - TAMIL
-
சிறைச்சாலைக் கைதிகள் 11,500 பேருக்கு பி.சி.ஆர்!

சிறைச்சாலைக் கைதிகள் 11,500 பேருக்கு பி.சி.ஆர்!


சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 28 ஆயிரம் வரையான கைதிகளில் 11 ஆயிரத்து 500 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"கொரோனாத் தொற்று ஏற்படும் கைதிகளை கந்தகாடு, கல்லேல்ல தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைதிகளைப் பார்வையிட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கைதிகளைத் தனித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறைச்சாலைகளில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுகாதார உபகரணத் தொகுதிகளையும் வழங்கியுள்ளோம்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE