இலங்கையில் கொரோனாத் தொற்று 3வது அலை பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் கொழும்பு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் கொரோனாத் தொற்றுறுதியானவர்களது எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேல் மாகாணத்தில் கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 140 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 6 ஆயிரத்து 502 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் ஆயிரத்து 73 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று முன்தினம் 878 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு தொற்றுதியானவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 402 பேரும், கம்பஹா களுத்துறை மாவட்டத்தில் 188 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 106 பேரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு