கிளிநொச்சி மாவட்டம் கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதற்கு ஒரு அங்குலமே உள்ள நிலையில் கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த குளத்தின் நீரேந்து பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தால் நீரேந்து பிரதேசங்களில் காணப்படுகின்ற வீடுகள் மற் றும் கட்டங்களுக்குள் நீர்மட்டம் உயர்வதற்கானஅபாய நிலை காணப்படுகின்றது. அதேபோல பரந்தன் பகுதியும் வெள்ளப் பாதிப்பினை எதிர்கொள்ளலாம் என்பதால் அந்தப் பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி