Thursday 28th of March 2024 12:43:44 PM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியா-கல்மடு இளைஞனுக்கு கொரோனாத் தொற்றுறுதி!

வவுனியா-கல்மடு இளைஞனுக்கு கொரோனாத் தொற்றுறுதி!


கொழும்பில் பணியாற்றி திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த வவுனியா-கல்மடு இளைஞனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞன் கொழும்பு கொட்டேனாவில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22ம் திகதி வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய இளைஞன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த டிச-02ம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இப்பரிசோதனை பிரகாரம் குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து நேற்று வியாழன் இரவு கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் 14 நாட்கள் குறித்த இளைஞன் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வவுனியாவில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கொழும்பு, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE