அதிகரித்த கோவிட் -19 சோதனை தொற்று நோய் பரவுதலைக் குறைப்பதில் மிகப் பெரிய செல்வாக்கை செலுத்துகிறது. அத்துடன் தடுப்பூசி இல்லாமல் நோயை கிட்டத்தட்ட அகற்றக்கூடிய ஒரே அறியப்பட்ட அணுகுமுறை அதிகரித்த பரிசோதனையே என புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 173 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கோவிட் -19 தொற்று பரவில் குறித்து செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள சுகாதாரக் கொள்கை நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் முன்னெடுத்த இந்த ஆய்வு முடிவு புதன்கிழமை மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிட்டது.
கோவிட் -19 தொற்று நோயைக் கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிப்பது. அதன்மூலம் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்படும் தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்துவது மற்றும் தொற்று தடமறிதல் செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பனவே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொற்றுநோயைத் கட்டுப்படுத்த ஒரே வழி அது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதே. இதற்கு அடிப்படையான கொரோனா பரிசோதனைகளே உள்ளன.
ஒரு நோயாளியிடம் இருந்து கிட்டத்தட்ட 10 பேருக்கு பரிமாற்றம் நிகழ்கிறது. இந்நிலையில் சோதனைகளை அதிகரித்து தொற்று நோயாளிகளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதன் மூலம் பரிமாற்றம் 90 வீதத்தால் குறைக்கப்படுகிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பாடசாலைகளை மூடுதல், முக கவசங்களை அணிவது ஆகியன தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் ஓரளவு தாக்கத்தைச் செலுத்தியுள்ளன.
சோதனை, தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளே வளைவைத் தட்டையாக்குவதற்கான மிகச் சிறந்த செயல்பாடாக இருக்கும் எனவும் ஆராய்ச்சியானர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே சோதனையை போதுமான அளவிற்கு உயர்த்துவது அமெரிக்காவில் சவாலாக இருந்தது. இதுவே, ஏனைய நாடுகளை விட அங்கு தொற்று நோய் அதிகரிப்பதற்காக முக்கிய காரணி எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)