Thursday 25th of April 2024 12:59:15 AM GMT

LANGUAGE - TAMIL
-
மாவீரர் நாள் தொடர்பிலான வழக்கு; நெல்லியடி பொலிஸாரின் பிரசன்னம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது!

மாவீரர் நாள் தொடர்பிலான வழக்கு; நெல்லியடி பொலிஸாரின் பிரசன்னம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது!


மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட்டவர்கள் மீது பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பின்வாங்கியுள்ளனர்.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மாவீரர் நாள் நினைவேந்தல்களின் போது பாரிய பிரச்சினைகள் ஏற்படும் வகையில் சம்பவங்கள் நடைபெறவில்லை என்று பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் வழக்கு விசாரணைகளில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்திருந்த நிலையில் குறித்த இரு தரப்பும் குறித்த வழக்கிலிருந்து நீதிபதியால் நீக்கப்பட்டது.

இருந்தபோதிலும் ஏற்கனவே அறிவித்திருந்தும், வழக்கு விசாரணைக்கு சமூகம் அளிக்காத நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தொடர்பில் நீதிமன்றினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் எதிர்வரும் 8ஆம் திகதிக்கு மீண்டும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள வழக்கு விசாரணையில் வழக்குத் தொடுநர்கள் சார்பில் நெல்லியடிப் பொலிஸார் மட்டுமே பிரசன்னமாவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE