கிளிநொச்சி மாவட்டம் கனகாம்பிகைக்குளம் சற்றுமுன்னர் முதல் வான்பாய ஆரம்பித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
கனகாம்பிகைக்குளம் வான் பாய்ந்தால் குளத்தின் நீரேந்து பிரதேசத்தில் உள்ள வீடுகள், கட்டங்களுக்குள் நீர்புகும் அபாயம் உள்ளது என்றும் பரந்தன் பகுதியில் வெள்ளத் தாக்கம் ஏற்படும் என்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புரேவி புயல் தாக்கத்தின் தொடராக குளத்திற்கான நீர் வரத்து சடுதியாக அதிகரித்திருந்தமை தெரிந்ததே.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி