கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புரேவி புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு இதுவரை யாரும் உதவ முன்வரவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
வருடம்தோறும் தாம் வெள்ள அனர்த்தத்தை எதிர் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி