Friday 29th of March 2024 03:07:50 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொழும்பில் கொரோனா உச்சம்: ஒரேநாளில் 402 பேருக்கு தொற்றுறுதியானது!

கொழும்பில் கொரோனா உச்சம்: ஒரேநாளில் 402 பேருக்கு தொற்றுறுதியானது!


இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் அதிகளவானவர்களுக்கு கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று (டிச-03) 628 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 402 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 66 தொற்றாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 35 தொற்றாளர்களும் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

மூன்றாவது அலை மூலம் கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 542 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று நள்ளிரவுவரை 26 ஆயிரத்து 37 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 19 ஆயிரத்து 31 பேர் குணமடைந்துள்ளனர். 129 பேர் உயிரிழந்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE