இலங்கையில் இன்று 521 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
அதன்படி, திவுலபிட்டி - பேலியகொடை கொத்தணி தொற்று நோயாளர் தொகை 23,005 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் எண்ணிக்கை 26,559 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, தொற்றுக்குள்ளான 19,438 பேர் இன்றுவரை குணமடைந்துள்ளனர். 6,992 நோயாளிகள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 129 பேர் உயிரிழந்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை