யாழ். வலிகாமம் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வரும் கும்பலைச் சேர்ந்த ஒருவரை காங்கேசன்துறை பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து ஒரு தொகுதி நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக வலிகாம் பிரதேசத்தின் மானிப்பாய், சங்கானை, சண்டிலிப்பாய், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை உள்ளிட்ட பல இடங்களில் வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று வந்துள்ளமை குறித்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில்தான், காங்கேசன்துறை பொலிஸ் நிலைய விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று மேற்கொண்டிருந்த விசேட நடவடிக்கையில் அக்கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மானிப்பாயைச் சேர்ந்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒரு தொகுதி நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களைத் திருடி அதனைப் பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபட்டு பின்னர் ஆங்காங்கே கைவிட்டுச் சென்றுவிடுவதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், வழிப்பறிக் கும்பலைச் சேர்ந்த மேலும் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் காங்கேசன்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதையடுத்து குறித்த சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட நகைத் தொகுதியையும் தெல்லிப்பழை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மேலும் தெரிவித்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்