துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மாத்தளை வில்கமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.