Thursday 25th of April 2024 09:30:57 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு!

ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு!


ஆறாம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கான கால எல்லை குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை 2021 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதற்கான விண்ணப்பங்களையும் ஆலோசனை பத்திரங்களையும் பாடசாலைகளின் அதிபர்களிடம் இருந்து பெற்றோர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

சரியாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைகளின் அதிபரிம் கையளிக்க வேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு நாட்டில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை தத்தமது பாடசாலைகளுக்கே பெற்றுக்கொள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி வலய கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களை நாடுமாறும் கல்வியமைச்சு அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE