தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்ரோஸ் நெடுந்தொடரின் நாயகியும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான சித்ரா காமராஜ் இன்று விருந்தினர் விடுதி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விரைவில் அவருக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்துள்ளதாக தெரியவருகிறது.
1992 ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி பிறந்த அவர், 2013 ஆம் ஆண்டு சின்னத்திரையில் கால்பதித்து நேற்று வரை நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் வலம்வந்திருக்கின்றார்.
மரணம் தற்கொலையா கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.