Friday 19th of April 2024 04:13:06 PM GMT

LANGUAGE - TAMIL
-
டிசம்பர்-15 முதல் பிரான்ஸில்  இரவு நேர ஊடரங்கு அமுலாகிறது!

டிசம்பர்-15 முதல் பிரான்ஸில் இரவு நேர ஊடரங்கு அமுலாகிறது!


கோவிட் -19 தொற்று நோயுடன் பிரான்ஸ் தொடர்ந்து போராடிவரும் நிலையில் நாட்டில் சுற்றுலா மையங்களைத் திறக்கும் முடிவு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன், டிசம்பர் 15 முதல் இரவு நேர ஊடரங்கு அமுலாகும் என அரசு அறிவித்துள்ளது.

ஒக்டோபர் பிற்பகுதியில் பிரான்ஸ் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியபோதும் அரசாங்கம் எதிர்பார்த்த அளவுக்கு தொற்று நோய் பாதிப்பு குறையவில்லை என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியேற விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் டிசம்பம் 15 ஆம் திகதி முதல் திட்டமிட்டவாறு நீக்கப்படும். எனினும் அன்று முதல் தினசரி இரவு 8 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்படும்.

கூட்டங்களைத் தவிர்க்கும் நோக்கில் புண்தாண்டு தினத்திலும் இந்த நடைமுறைகளில் விதிவிலக்கு இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொற்று நோயாளர்களில் எண்ணிக்கை 5,000 என்ற அளவுக்குக் குறைந்தால் டிசம்பர் 15 முதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என முன்னர் பிரான்ஸ் அரசு அறிவித்திருந்தது.

எனினும் தற்போது தினசரி தொற்று நோயாளர் தொகை 10 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது. நேற்று வியாழக்கிழமை 13,750 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தொற்று நோயின் இரண்டாவது அலை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. டிசம்பர் 15 ஆம் திகதி தினசரி தொற்று நோயாளர் தொகையை 5 ஆயிரத்தக்கு கீழே கொண்டுவர எதிர்பார்த்த இலங்கை நாங்கள் அடையவில்லை. இந்நிலையிலேயே இரவு நேர ஊடரங்கை அமுல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் காஸ்டெக்ஸ் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE