எல்.பி.எல்.-2020 ரீ-20 தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக காலி கிளாடியேட்டர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கும், கொழும்பு கிங்ஸ் அணிக்குமான எல்.பி.எல். முதலாவது அரையிறுதி போட்டி நேற்று ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கொழும்பு கிங்ஸ் அணி சார்ப்பில் அதிகபட்சமாக டேனியல் ட்ரமன்ட் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து எல்.பி.எல்.-2020 ரீ-20 தொடரில், முதலாவது அணியாக காலி கிளாடியேட்டர்ஸ் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இன்று பி.ப. 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டி ஜப்னா ஸ்டாலியன் மற்றும் தம்புள்ள வைக்கிங் அணிகள் மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை