சீனாவின் யாங்சி ஆற்றில் இரண்டு கப்பல்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன், 05 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜின்கிஷெங் 69 என்ற விபத்தில் தொடர்புடைய கப்பலில் இருந்த 16 பேரில் 11 பேர் தண்ணீரில் இருந்து மீட்கப்படும் காட்சிகளை அரச தொலைக்காட்சி சேவையான சி.சி.டி.வி. வெளியிட்டுள்ளது. அவர்களில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். காணாமல் போயுள்ள 5 போரையும் தேடும் பணிகள் இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.