இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ள உப கொத்தணியில் இன்றும் (டிச-15) மேலும் 19 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் பொத்துவில் சுகாதார பிரிவுக்குட்பட்டு கடந்த 12 மணித்தியாலங்களில் மேலும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலங்களில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைவாக,பொத்துவில் - 12,
சம்மாந்துறை - 03,
சாய்ந்தமருது - 01,
காரைதீவு - 01,
இறக்காமம் - 01,
அட்டாளைச்சேனை - 01
ஆகிய இடங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்டது கிழக்கு மாகாண தொற்று எண்ணிக்கை 580 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை