கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில்-உல்லை பிரதேசம் முடக்கப்பட்டு நடமாட்ட காட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 மணித்தியாலங்களில் குறித்த பகுதியில் 12 பதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பொத்துவில் சுகாதார பிரிவினரால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பொத்துவில்-உல்லை பிரதேசத்திற்கு வெளியாட்கள் உட்செல்லவும் அங்குள்ளவர்கள் வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டு நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் அம்பாறை காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாளிகைக்காடு பகுதியும் மறு அறிவித்தல் வரும்வரை சுகாதாரப் பிரிவினரால் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை