Tuesday 23rd of April 2024 05:29:26 AM GMT

LANGUAGE - TAMIL
-
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை  கொரோனா வைரஸ் ஆபத்தானதா?

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ஆபத்தானதா?


இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொடா்பில் அறிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

எனினும் புதிய வகை கொரோனா வைரஸ் வித்தியாசமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கான எந்த ஆதரவும் இல்லை என உலக சுகாதார அமைப்பின்அவசர திட்ட நிபுணர் மைக் ரியான் தெரிவித்தார்.

ஜெனீவாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போதே அவா் இவ்வாறு கூறினார்.

இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 1000 பேர் வரையானோர் மரபணு மாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்து அறிந்துள்ளோம். உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

எனினும் கொரோனா வைரஸில் பல வகைகளை நாங்கள் அவதானித்துள்ளோம். இந்த வைரஸ் காலப்போக்கில் மாற்றம் பெற்று வருகிறது எனவும் அவா் மேலும் கூறினார்.

இங்கிலாந்தியில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து அங்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் வீரியத்துடன், வேகமாகப் பரவும் என்ற அச்சம் அங்கு நிலவி வரும் நிலையிலேயே உலக சுகாதார அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE