Thursday 25th of April 2024 08:32:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
அக்கரைப்பற்று: மூன்று பிரதேச செயலக பிரவுகள் உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் முடக்கம்!

அக்கரைப்பற்று: மூன்று பிரதேச செயலக பிரவுகள் உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் முடக்கம்!


கொரோனாத் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்கரைப்பற்று பகுதியில் மூன்று பிரதேச செயலக பரிவுகள் உள்ளிட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய 3 பிரதேச செயலகப் பிரிவுகளும் காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்தன.

குறித்த பகுதிகளில் நடைமுறையில் இருக்கும் நடமாட்ட கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று சந்தையில் தொங்கிய கொரோனாத் தொற்று அக்கரைப்பற்று கொத்தணியாக உருவெடுத்து நேற்று வரை 446 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE