Wednesday 24th of April 2024 11:42:09 PM GMT

LANGUAGE - TAMIL
.
மேலும் பலருக்கு தொற்றுறுதி: கல்முனையில் சில பிரதேசங்கள் உடன் முடக்கப்பட்டது!

மேலும் பலருக்கு தொற்றுறுதி: கல்முனையில் சில பிரதேசங்கள் உடன் முடக்கப்பட்டது!


கிழக்கு மாகாணம் கல்முனை பிராந்தியத்தில் மேலும் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கல்முனையின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, கல்முனை செய்லான் வீதியிலிருந்து அம்மன்கோயில் வரை உள்ள பாதைகள் அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக கல்முனை மாநகர முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியில் இன்று மேற்கொண்ட அண்டிஜன் பரிசோதனையில் சுமார் 15 ற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலம் தொற்றாளர்களை இனங்காணும் வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கல்முனை செயிலான் வீதி, கடற்கரைப் பள்ளி வீதி, மாதவன் வீதி மரியார் வீதி, சின்னத்தம்பி வீதி, உடையர் வீதி, கோயில் வீதி வரையான இடங்கள் இன்று புதன்கிழமை இரவு 7.00 மணி தொடக்கம் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சுகாதா வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் மேற்படி பகுதிகள் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்படுகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE