கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்று தினமும் அதிகரிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்றும் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணம் கல்முனை பிராந்திய சுகாதார பிரிவிற்குட்பட்ட கல்முனை தெற்கில் இன்று (டிச-17) 27 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று மேற்கொண்ட அண்டிஜன் பரிசோதனையில் 27 கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களுடன் தொடர்புபட்டு மேலும் தொற்றாளர்களை இனங்காணும் வரைக்கும் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பித்து அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மேலும் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் இதுவரை தொற்றுறுதியானவர்களது எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை