யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் தனியார் விடுதிக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் கடந்த இரவு நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்து விழுந்துள்ளது.
குறித்த சுனாமிமுன்னெச்சரிக்கை கோபுரத்தின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற சுனாமி முன்னெச்சரிக்கை தொடர்பான அவதானிப்புகள் பெறப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு யாழில் நிலவிய மழையுடன் கூடிய அசாதாரண காலநிலையின் தாக்கத்தின் காரணமாக குறித்த கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளது.
குறித்த கோபுரத்தினை மீண்டும் நிலைநிறுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக தெரியவருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை