யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஓடைக்கரை கிராமத்தில் கொள்ளையில் ஈடுபட்ட திருடர்களால் கொரோனா காவிச் செல்லப்பட்டதா என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
கடந்தமாதம் கொரோனா சிகிச்சைக்காக சென்றிருந்த குறித்த கிராமத்தினைச் சேர்ந்த குடும்பத்தினர் வீடு திரும்பியிருந்த நிலையில் வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த வீட்டில் இருந்தவர்கள் அனைவருக்கும் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அவர்கள் வீட்டில் பயன்படுத்திய பொருட்களில் கொரோனா வைரஸ்கள் காணப்பட்டிருக்காலம் என்பதால், கொரோனா வைரஸ் உயிர்வாழக்கூடிய காலப் பகுதிக்குள் திருடர்கள் அங்கு சென்றிருந்தால் அவர்களை கொரோனா தொற்றியிருக்கக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் திருடர்கள் என்பதால் அவர்கள் தாமாக முன்வந்து குறித்த விடயத்தை வெளிப்படுத்தக்கூடிய சாத்தியம் இல்லை. இதனால் அவ்வாறு கொரோனா பரவியிருந்தால் அது மற்றொரு கொத்தணியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்கின்றனர் சுகாதார உத்தியோகத்தர்கள்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை