முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்தில் நேற்று வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் 37 வயதுடைய கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் அவருடைய மகளான 03 வயதுடைய ரவீந்திரன் சார்ஜனா அவர்களுடன் அயல்வீட்டுச் சிறுவனாகிய 13 வயதுடைய இரவீந்திரகுமார் சஞ்சீவன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பயணித்த வாகனம் குளத்தினுள் பாய்ந்த போது வாகனத்தில் அவர்களுடன் பயணித்த ரவீந்திரனின் மகன் நீந்திக் கரை சேர்ந்திருந்தார்.
நீண்ட நேரத்தின் பின்னரே சடலங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு