முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.சி.ஜெயகாந்த் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22.12.2020) இடம்பெற்றது.
குறித்த பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மக்களின் நலன்பேணும் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன.
நீர்பாசனம், விவசாயம், கமநல சேவை திணைக்களம், கால்நடை, பனை மற்றும் தென்னை, மரமுந்திரிகை கூட்டுத்தாபனம், நன்னீர் மீன்பிடி, கல்வி, சுகாதாரம், வீதி, நீர்வழங்கல்,உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், போக்குவரத்து, NHDA வீட்டுத்திட்டம், அனர்த்த முகாமைத்துவம், கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ விணோ நாகரதலிங்கம், மற்றும் திணைக்கள தலைவர்கள், பிரதேச சபை தவிசாளர், பிரதித் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு