Saturday 20th of April 2024 02:40:24 AM GMT

LANGUAGE - TAMIL
.
மூதூரில் 15 பேருக்கு தொற்றுறுதி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

மூதூரில் 15 பேருக்கு தொற்றுறுதி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!


மூதூரில் 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மூதூர் வாழ் பொதுமக்கள் அனைவருக்கு சுகாதார வைத்திய அரிகாரி காரியாலயத்தினால் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அவ் அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மூதூர் வாழ் சகல பொது மக்களுக்குமான அறிவித்தல்!

கடந்த இரண்டு நாட்களுக்குள், மூதூர் பொலிஸ் நிலையம் மற்றும் HNB வங்கிக்கு அருகாமையில் உள்ள லொத்தர் விற்பனை நிலையம் எள்பவற்றில் இருந்து 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே 2020.12.08 ஆம் திகதிக்கு பின்னர், அதாவது கடந்த இரண்டு வாரங்களுக்குள் பொலிஸ் நிலையத்திற்கு தேவை நிமிர்த்தம் சென்றவர்கள் மற்றும் போக்குவரத்துப் பொலிஸாருடன் தொடர்புகளைப் பேணியவர்களும், லொத்தர் விற்பனை நிலையத்தில் டிக்கட் கொள்வனவு செய்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்களும் உடனடியாக மூதுர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அல்லது தங்கள் பிரதேச பொது சுகாதார பரிசோதகரிடம் தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலதி தொடர்புகளுக்கு : - 026 2238262 மற்றும் 077 6143232


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE