திருகோணமலை துறைமுகத்தில் 1.5 கிலோமீட்டர் ரயில் பாதை அமைத்தல் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (டிச-24) திருகோணமலை துறைமுகத்தல் இடம்பெற்றது.
துறைமுக மற்றும் கடற்படை விவகார அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன அமைச்சர் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார், இச்சந்திப்பில் துறைமுக மற்றும் கடற்படை அமைச்சின் செயலாளர், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கபில நுவன் மற்றும் பலர் பங்கேற்றிருந்தனர்.
தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பயனுள்ள அபிவிருத்தி திட்டத்தை அமைப்பதற்கான திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளை நிர்மானிக்கவும் புனரமைப்பதற்குமாக ஒரு முன்னணி குழுவை நியமிக்க உத்தேசிக்கப்பட்டது.
இதன் மூலமாக திருகோணமலையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், துறைமுக சுற்றுப்பயணத்தின் போது திருகோணமலை துறைமுகத்தின் பச்சை துறைமுகம் என்ற கருத்தை மேம்படுத்துவதற்காக திருகோணமலை துறைமுகத்தில் மரம் ஒன்றும் நடப்பட்டது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை