Wednesday 24th of April 2024 12:39:52 PM GMT

LANGUAGE - TAMIL
.
தெ.ஆபிரிக்காவுடனான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இலங்கை அணி!

தெ.ஆபிரிக்காவுடனான முதலாவது டெஸ்ட்: வலுவான நிலையில் இலங்கை அணி!


தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாளாகிய நேற்றைய நாள் ஆட்டம் நிறைவு பெற்றபோது இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 340 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ள சுற்றுலா இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

தென்னாபிரிக்காவின் செஞ்சூரியனில் நேற்றைய தினம் ஆரம்பமாகிய முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சூழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

போதிய வெளிச்சமில்லா காரணத்தினால் 85 ஓவர்களுடன் முதலாவது நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது இலங்கை அணி ஆறு விக்கெட்டுக்களை இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆரம்பநிலை வீரர்களான கருணாரத்னே 22 ஓட்டங்களுடனும், குசல் பெரேரா 16 ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தனர்.

53 ஓட்டஙகளை பெறுவதற்குள் முன்னணி வீரர்கள் மூவரையும் இழந்த நிலையில், தினேஸ் சந்திமல் தனஞ்செய டீ சில்வா இணை தென்னாபிரிக்க பந்து வீச்சை சமாளித்து சிறப்பான இணைப்பாட்டதை ஏற்படுத்தியிருந்தனர்.

இலங்கை அணி 185 ஓட்டங்களைப் பெற்றபோது உபாதை காரணமாக தனஞ்செய டீ சில்வா 79 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரிட்டயர்ட் ஹட் முறையில் வெளியேறியிருந்தார்.

அடுத்து வந்த நிரோசன் டிக்வெலவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஸ் சந்திமல் சமடிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் 85 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்தார். டிக்வெலவும் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

85 ஒவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் முதலாவது நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பில் முல்டெர் 3 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE