கொரோனாத் தொற்றினால் உயிரிழக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதை நிறுத்தக்கோரி நாடளாவிய ரீதியில் முனைப்புப் பெற்றுவரும் போராட்டத்தின் தொடராக யாழ்ப்பாணத்தின் நகர் பகுதியிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
அரசே உனது பலத்தை சிறுபான்மையினர் மீது கட்டவிழ்க்காதே, கிறிஸ்தவ, முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கை வைக்காதே, கொரோனாவினால் மரணிக்கும் சிறிஸ்தவ, முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கத்திற்கு அனுமதியளித்திடு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டக்காரர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ்.சமூகம் முன்னெடுத்த குறித்த போராட்டத்தில்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட் உட்பட்டவர்களும் முஸ்லிம், தமிழ் மக்களும் பங்குகொண்டிருந்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்